“கேஜிஎப்” படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் “சலார்’’ திரைப்படத்தால் தனிப்பட்ட வாழ்க்கை பாதிப்படைந்ததாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘சலார்’. நடிகர் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜுடன் இணைந்து நடித்துள்ளனர். படத்தை விஜய் கிரகந்தர் தயாரித்துள்ளார். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். டிசம்பர் 22ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு நேற்று இப்படம் உலகம் முழுதும் அதிக அளவிலான திரைகளில் ரிலீசானது. முதல் நாளில் உலகம் முழுவதும் “சலார்” திரைப்படம் 175 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. “சலார்” படபிடிப்பு பற்றி பிரசாந்த் நீல் புதிய தகவல் தெரிவித்துள்ளார். அதில், “சலார் ஷூட்டிங்கினால் என் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும், போதிய நேரம் செலவிட முடியவில்லை. குழந்தைகள் அழுதால் மட்டுமே மூன்று மாதத்திற்கு ஒருமுறை அவர்களை சந்திக்க வீட்டிற்குச் செல்வேன். நான் ஒரு சரியான தந்தையாக, கணவனாக இல்லை. “சலார்” திரைப்பட பணிகள் தொடர்பாக என் தனிப்பட்ட வாழ்க்கை பாதித்துள்ளது’’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.