இயக்குனர் முத்தையாவின் முயற்சி!

Filed under: சினிமா |

இயக்குனர் முத்தையா தனது மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தென் தமிழகக் கதைகளன்களை தன்னுடைய திரைப்படத்தில் தொடர்ந்து தனது திரைப்படங்களில் கொடுத்து வருபவர் இயக்குனர் முத்தையா. சசிக்குமார் நடித்த “குட்டிப்புலி” மற்றும் கார்த்தி நடித்த “கொம்பன்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் முத்தையா, அவர் படங்களில் சாதியக் கருத்துகள் இடம்பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அவர் திரைப்படங்கள் வெற்றியைப் பெறுகின்றன. சமீபத்தில் அவர் இயக்கிய “விருமன்” திரைப்படம் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து ஆர்யாவை கதாநாயகனாக்கி “காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் கோவில்பட்டியில் நடந்து வருகிறது. இதையடுத்து முத்தையா தன்னுடைய மகனை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்குமென சொல்லப்படுகிறது.