இலங்கையில் பரபரப்பு!

Filed under: உலகம் |

பெண் போராளிகளின் உடல்களுடன் மனித சடலங்கள் இலங்கை நாட்டின் முல்லைத் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் போராளிகளின் உடைகளுடன் மனித சடலங்கள் இலங்கை நாட்டின் முல்லைத் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் மத்திய பகுதியில் நீர் இணைப்பிற்காக கனரக இயந்திரம் கொண்டு குழி தோண்டப்பட்டது. அப்போது, உள்ளே மனித எச்சங்கள் தென்பட்டுள்ளன. இதைப்பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், பெண்களின் மேலாடை, பச்சை சீருடை, மற்றும் எலும்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.