இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே போர் மூளும் அபாயம்!

Filed under: உலகம் |

நேற்று காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன முக்கிய தலைவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக பகை நிலவி வருகிறது. கடன் அவ்வப்போது போரிட்டு வருகிறது. கடந்த வாரம் பாலஷ்தீன உண்ணாவிரத போராட்ட நடத்தி வந்த பிரபலம் காதர் அட்னன் மரணமடைந்தார். இதையடுத்து. அந்த நாட்டிலிருந்து, இஸ்ரேல் நாட்டை நோக்கி ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் படையினர் காரணமின்றி தன்னை கைது செய்யப்பட்டதாக கூறி காதர் அட்னன் 87 நாட்கள் வரை உண்ணாவிரத போராட்டம் இருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, இஸ்ரேல் மீது பாலஸ்தீன படை தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இஸ்ரேல் படையினரும் வான்வெளி தாக்குதல் நடத்தினர். இன்று காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் பலியாகினர்.