இ-சேவை மையங்களிலும் பணம் எடுக்கலாம்!

Filed under: தமிழகம் |

இனி அரசு பொது இ-சேவை மையங்களிலும் ஏடிஎம் மையங்களில் பணம் பெறுவது போல பணம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசு பொது இ-சேவை மையம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் அரசு அலுவலக பகுதிகளிலும் செயல்பட்டு வருகிறது. இந்த இ-சேவை மையங்கள் மூலமாக அரசு சார்ந்த பல சான்றிதழ்கள், சரிபார்ப்புகளை மக்கள் மேற்கொள்கின்றனர். ஒரு விவீஸீவீ பிuதீ ஆக செயல்படும் இந்த இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியையும் அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வங்கி ஏடிஎம்கள் தவிர பொதுத்துறை நிறுவனமான இந்திய அஞ்சல் துறை ஏடிஎம் மற்றும் பணம் பெறும் கார்டு வசதிகளை பெற்றுள்ளது. அதுபோல இ-சேவை மையத்தையும் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சேவையை செயல்படுத்த இ-சேவை மையங்களை டிஜிபே வரம்பிற்குள் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆதார் பயோமெட்ரிக் வாயிலாக வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியும். இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.