ஈபிஎஸ்-க்கு பாஜக எச்சரிக்கை!

Filed under: அரசியல்,தமிழகம் |

மதுரை பாஜகவினர் “மலையோடு மோதி மண்ணாகிவிட வேண்டாம்” என எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாஜக பிரமுகர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள் கடந்த சில நாட்களாகவே கடும் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கி பேட்டியளித்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்று செல்லூர் ராஜூ கூறியதற்கு அண்ணாமலை “அரசியல் விஞ்ஞானிகள் எல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்திருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுத்து மதுரை பாஜகவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் “மலையோடு மோதி மண்ணாகி விட வேண்டாம். அதிமுகவின் ஊழல் அமைச்சர்கள் பட்டியலை தேடி எடுத்து அனுப்ப எங்களால் முடியும். பாஜக தனித்துப் போட்டியிட்டதால்தான் அதிமுக 10 மேயத் தேர்தலில் தோல்வியடைந்தது. இரட்டை இலை சின்னம் மீதான மரியாதைக்காக அமைதி காக்கிறோம். அதிமுக தலைவர்கள் அண்ணாமலையை விமர்சித்தால் ஊழலை வெளிக்கொண்டு வருவோம்” என்று அவ்வறிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.