உக்ரைன் போரில் 20 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி!

Filed under: உலகம் |

கடந்த ஆண்டு ரஷ்யா நாடு, உக்ரைன் மீது போரை துவங்கியது. இப்போரிற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்தாலும், ரஷ்யா எதையும் பொருட்படுத்தவில்லை.

உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளும் நேட்டோ கூட்டமைப்புகளும் நிதியுதவி மற்றும் ஆயுதவுதவி செய்து வருகின்றன. இதனால், உக்ரைன், ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. கடந்தாண்டு டிசம்பர் முதல் தற்போது வரை உக்ரைன் போரில் சுமார் 20 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும், 80 பேர் இப்போரில் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளளர் ஜான் ஜெர்பி, “கடந்த 5 மாதத்தில் ரஷ்ய வீரர்கள் 20 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்பது எங்கள் கணிப்பு. ரஷ்யாவினால் முக்கியத்துமுள்ள எந்த இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை’’ என்று கூறியுள்ளார்.