உதயநிதி ஸ்டாலின் நீட் குறித்து விமர்சனம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை என்பதை குறிப்பதற்காக ஒரே ஒரு செங்கலை கையில் வைத்துக்கொண்டு உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது அதேபோல் தற்போது உதயநிதி ஸ்டாலின் நீட் விலக்கு கையெழுத்து விளக்க பிரச்சாரத்தில் கையில் ஒரு முட்டையை வைத்துக்கொண்டு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கையெழுத்து இயக்க தொடக்க விழாவில் நீட் பிஜி தேர்வில் முட்டை பர்செண்டேஜ் எடுத்தால் போதும் என்று முட்டையை காண்பித்து அவர் விமர்சனம் செய்தார். நீட் விலக்கு நம் இலக்கு என்றும் முட்டையை காட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.