உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர் கைது!

Filed under: இந்தியா |

உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர் ஒருவரை சாமி படம் பிரிண்ட் செய்யப்பட்டுள்ள பேப்பரில் இறைச்சியை மடித்து கொடுத்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தின் சாம்பல் பகுதியில் தலிப் ஹுசைன் என்பவர் கறிக்கடை மற்றும் மெஹாக் என்னும் உணவகத்தை நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் விற்கப்படும் கறியை பார்சல் செய்வதற்கு திட்டமிட்டே இந்து கடவுள்கள் உள்ள நாளிதழ்களை பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. பலரும் அவர் இந்து கடவுள் படம் உள்ள பேப்பரில் கறி மடிக்கும் போட்டோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் இது பெரும் சர்ச்சையானது. அதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள் தலிப் ஹுசைனை கைது செய்துள்ளனர்.