உலகம் முழுவதும் உள்ள மக்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது அமெரிக்காவில் மக்கள் பனியில் சிக்கி தவித்து வருகின்றனர்.
வரலாறு காணாத கடும் பனிபொழிவால் அமெரிக்க மாகாணங்கள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளை விட்டே வெளியேற முடியாத சூழல் நிலவுவதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன. பல மாகாணங்களில் விமான சேவைகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலைகள் பனிமூடி கிடப்பதால் வாகனங்கள் மூலமாகவும் பயணிக்க முடியாமல் மக்கள் சிக்கியுள்ளனர். சில பகுதிகளில் கடும் பனியால் மக்கள் சிலர் கார்களுக்குள் உறைந்த நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதீத பனிப்பொழிவாம் அமெரிக்காவின் பிரபலமான நயகரா நீர்வீழ்ச்சியே உறைந்து போய் காணப்படுகிறது. வரும் நாட்களில் தொடர்ந்து பனிப்பொழிவு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவே புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.