எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட நிவாரணம்: முதலமைச்சர் உத்தரவு!

Filed under: அரசியல்,தமிழகம் |

சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவரது உத்தரவில், “சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் கடந்த 5ம் தேதி ஏற்பட்ட எண்ணெய் கசிவினை அகற்ற தமிழ்நாடு அரசு துரிதமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த எண்ணெய் கசிவால் மீன்பிடி தொழிலை தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். கூடுதலாக எண்ணெய் கசிவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண தொகையாக 12,500 வீதம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மீன்பிடி படகுகளை சரிசெய்ய படகு ஒன்றுக்கு தலா ரூ.10000 விதம் வழங்கப்படும். இத்தொகை மீனவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 6500 குடும்பங்களுக்கு தலா 7500 வீதம் 5 கோடியே 2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். இந்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 9001 குடும்பங்களுக்கு 8 கோடி 68 லட்சம் ரூபாய் வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.