எம்பிக்கு வந்த கொலைமிரட்டல்!

Filed under: அரசியல்,இந்தியா |

மராட்டியத்தில், சிவசேனாவினின் (உத்தவ் அணி) எம்பி.சஞ்சய் ராவத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தின் சிவசேனா( உத்தவ் தாக்கரே அணி) நாடாளுமன்ற மேலவை எம்பியாக சஞ்சய் ராவத் உள்ளார். இவருக்கு பாடகர் சித்து மூஸ்வாலாவை கொன்ற லாரன்ஸ் பிஸ்க்னோய் கும்பலிடமிருந்து கொலைமிரட்டல் வந்துள்ளது. இதுபற்றி அவர் போலீஸீல் புகாரளித்துள்ளார். அதில்,’டெல்லியில் வந்து என்னைச் சந்தித்துப் பார்..ஏகே.47 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவோம். பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொல்லப்பட்டது போல் நீயும் கொல்லப்படுவாய்ஞ்நடிகர் சல்மான் கானும் கொல்லப்படுவார்’ என்று மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சஞ்சய் ராவத் “ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான இந்த அரசு ஆட்சிக்கு வந்தபின் எங்கள் தலைவர்களின் பாதுகாப்பு குறைந்துள்ளது. இதுகுறித்து நான் கடிதம் எழுதவில்லை. முதலமைச்சரின் மகன் கொலை கும்பலுடன் சேர்ந்து எங்களை கொல்லை சதி திட்டம் தீட்டி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.