ஓபிஎஸ் நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டதற்கு காரணம்?

Filed under: அரசியல் |

ஓபிஎஸ் தரப்பில் நீதிபதியிடன் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓபிஎஸ் தரப்பினர் பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதியிடம் மாற்ற வேண்டும் என தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து அந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு ஓபிஎஸ் சார்பில் மன்னிப்பும் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலைமை நீதிபதிக்கும் அளிக்கப்பட்ட கடிதத்தை திரும்பப் பெறுங்கள் என நீதிபதி கிருஷ்ணன் ஓபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்த இதையடுத்து ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டு அந்த மனுவை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் மன்னிப்பு கேட்டது உள்ளிட்ட அதனிடம் கூறிய அனைத்து அனைத்தையும் மனுவாக தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தற்போது நீதிமன்றத்தில் அவரது தரப்பினர் மன்னிப்பு கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.