ஓபிஎஸ் பேச்சை நிறுத்த சொன்ன பாஜக நிர்வாகி!

Filed under: அரசியல்,தமிழகம் |

பிரதமர் மோடி சேலத்தில் நடைபெற்றுவரும் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பாஜக நிர்வாகி அவரை பேச்சை நிறுத்த சொல்லிவிட்டு பாரத் மாதா கி ஜே என முழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இக்கூட்டத்தில் டிடிவி தினகரன், வாசன், ஓ பன்னீர்செல்வம், டாக்டர் ராமதாஸ், ஜான் பாண்டியன், சரத்குமார் உள்ளிட்ட பாஜக தலைவரும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர் செல்வம் இந்த மேடையில் பேசிக்கொண்டிருந்த போது தமிழகத்திற்கு ஒரே கையெழுத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை அரசாணை மூலம் வழங்கியது பாரதப் பிரதமர் மோடி தான் என்று அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பாஜக நிர்வாகி ஒருவர் அவரின் பேச்சை நிறுத்த சொல்லிவிட்டு பிரதமர் வருவதை குறிப்பிட்டு பாரத் மாதா கி ஜே, தேசிய தலைவர் பிரதமர் மோடிஜி என்று முழங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.