ஓய்வு பெறும் நாளில் ஓட்டுனரின் நெகிழ்ச்சி சம்பவம்!

Filed under: தமிழகம் |

அரசுப் பேருந்து ஓட்டுனர் ஒருவர் நேற்றுடன் ஓய்வு பெறும் நிலையில் அவர் ஓட்டி வந்த பேருந்தை தொட்டு வணங்கி அழுத வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலூகாவைச் சேர்ந்த முத்துப்பாண்டி திருப்பரங்குன்றம் அரசுப்பேருந்து பணிமனையில் ஓட்டுனராகப் பணியாற்றி வந்தார். நேற்று அனுப்பானடியில் இருந்து மகாலட்சுமி காலணி செல்லும் பேருந்தை கடைசியாக ஓட்டி தந்து பணியை நிறைவு செய்தார். 30 ஆண்டுகளாக ஓட்டுனராகப் பணியாற்றிய முத்துப்பாண்டி, நேற்று பேருந்து நிலையத்திற்குள் பேருந்தை கொண்டு சென்ற பின்னர், இருக்கையில் அமர்ந்து பேருந்தின் ஸ்டியரிங், பிரேக் ஆகியவற்றை கையால் தொட்டுப்பார்த்து முத்துப்பாண்டி வணங்கினார். அதன்பின்னர், கீழிறங்கி வந்த அவர், பேருந்தின் முன்பக்கத்தை கட்டிப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் கண்ணீர் விட்டு அழுதார். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.