ஓரிரு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

Filed under: தமிழகம் |

டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள்(01.-03.-23) தென் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல், மார்ச் 2,3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் அதன் புற நகர்ப்பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அங்கு அதிபட்ச வெப்ப நிலை 32-&33 டிகிரி செல்சியஸ் காணப்படும் எனவும், குறைந்தபட்ச வெப்ப நிலை 21&-22 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.