ஓ.பன்னீர்செல்வத்தை கிண்டல் செய்த ஜெயகுமார்!

Filed under: அரசியல் |

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓ.பன்னீர்செல்வத்தை “ஆளில்லாத கடையில் டீ ஆத்துகிறார்” என கிண்டலடித்துள்ளார்.

ஓ பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டு இணை ஒருங்கிணைப்பாளர், மாவட்ட செயலாளர் உட்பட பல்வேறு பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்து வருகிறார். இதுபற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அதிமுகவினர் யாரும் இல்லை. ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓ பன்னீர்செல்வம் ஆட்களை நியமித்து வருகிறார்” அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி அவர் கூறும்போது, “திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின் சொத்துவரி, விலைவாசி, மின்கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மறைந்த தலைவர்களுக்கு நினைவுச்சின்னம் அமைப்பதற்கு பணம் இருக்கும் திமுக அரசுக்கு மக்கள் நலத்திட்டங்களுக்கு பணம் இல்லாமல் போனது எப்படி?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.