கமலஹாசன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

Filed under: சினிமா |

நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமலஹாசன் நடிப்பில் வரும் ஜூன் 3ம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் “விக்ரம்”. இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்ககியுள்ளார். படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “பத்தல.. பத்தல..” பாடல் வெளியானது. அரசியல் வரிகளும் கலந்து வெளியான இந்த பாடல் வைரலாகியுள்ளது.

இப்பாடல் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி “சகலகலாவல்லவன் + மார்க்கண்டேயன் = கமல்” வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் பாடலின் வரியிலே இறக்கிட்டாப்ல. ஒன்றியங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு!” என்று பதிவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் பாடல் வெளியிட்டுள்ள நடிகர் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அதில், “விக்ரம்“ படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை நீக்க வேண்டும், மத்திய அரசை விமர்ச்சித்து பாடல் வெளியிட்ட “விக்ரம்“ படத்தின் நடிகர் கமலஹாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.