காங்கிரஸ் எம்.எல்.ஏ. வங்கி ஊழியர் மீது தாக்குதல்!

Filed under: அரசியல்,இந்தியா |

வங்கி ஊழியர் ஒருவரை காங்கிரஸ் எம்.எல்.ஏ. நடுத்தெருவில் பொதுமக்கள் மத்தியில் அடித்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ பிரிஹஸ்பத் சிங் வங்கி ஒன்றில் சென்று அங்குள்ள ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். விவசாயிகளின் பணத்தை வங்கி ஊழியர்கள் கையாடல் செய்துவிட்டதாகவும் இதையடுத்து கணக்கு புத்தகத்தை மறைத்துக் கொண்டு தான் கணக்கு கேட்டால் தவறான அணுகுமுறையை கையாண்டதாகவும் அவர் வங்கி ஊழியர்கள் மீது குற்றம் சாட்டினார். இதையடுத்து வங்கி ஊழியர்களுக்கும் எம்எல்ஏக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. அப்போது திடீரென வங்கி ஊழியரை வங்கியில் இருந்து வெளியே இழுத்து வந்து நடுரோட்டில் எம்எல்ஏ அடித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வங்கி அதிகாரிகள் காவல் நிலையத்தில் எம்எல்ஏ மீது புகார் அளித்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.