காவல் உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

Filed under: தமிழகம் |

தமிழக அரசு 19 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தோடு, 7 பேர் டிஐஜி பதவியிலும் 10 பேர் எஸ்பி பதவிகளும் நியமனம் செய்துள்ளது.

நேற்று தமிழக அரசின் உள்துறை செயலர் பி.அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஐபிஎஸ் அதிகாரிகள் ஆனந்த் குமார் சோமானி, ஆர்.தமிழ்சந்திரன் ஆகிய 2 பேரும் ஐஜி பதவியில் இருந்து கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரிகள் வி.ஜெயா, பி.சாமுண்டீஸ்வரி, எஸ்.லட்சுமி, எஸ்.ராஜேஸ்வரி, எஸ்.ராஜேந்திரன், எம்.எஸ்.முத்துசாமி, மயில்வாகணன் (2006 பிரிவு) ஆகிய 7 பேர் டிஐஜி பதவியில் இருந்து ஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரிகள் பி.ஆர்.வெண்மதி, பி.அரவிந்தன், வி.விக்ரமன், சரோஜ்குமார் தாகூர், டி.மகேஷ்குமார், என்.தேவராணி, இ.எஸ்.உமா, ஆர்.திருநாவுக்கரசு, ஆர்.ஜெயந்தி,ஜி.ராமர் ஆகிய 10 பேரும் எஸ்.பி பதவியில் இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.