குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பு

Filed under: தமிழகம் |

டிஎன்பிஎஸ்சி குரூப் 5 ஏ தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 18ம் தேதி நடைபெறும் எழுத்து தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 21 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்-5ஏ தேர்வுக்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களை நிரப்ப குரூப் 5ஏ தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பிக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.