குழந்தை விற்பனை தொடர்பாக மருத்துவர் சஸ்பெண்ட்!

Filed under: அரசியல்,தமிழகம் |

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து மா.சுப்பிரமணியன் பேட்டியில், “குழந்தை விற்பனையில் அரசு மருத்துவர் அனுராதா உடந்தையாக இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுநீரக விற்பனையிலும் ஈடுபட்டது குறித்து தெரியவந்துள்ளதால் அது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. குற்றம் உறுதி செய்யப்பட்டால் மருத்துவர் அனுராதா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு என்ற பகுதியில் விசைத்தறி தொழிலாளி தம்பதிக்கு கடந்த 12ம் தேதி பெண் குழந்தை பிறந்ததது. அக்குழந்தையை அங்கு மகப்பேறு மருத்துவராக பணிபுரியும் அனுராதா என்பவர் புரோக்கர் மூலம் இரண்டு லட்ச ரூபாய்க்கு பேசி குழந்தையை விற்பனை செய்ததாக தெரிகிறது. இது குறித்து தகவலறிந்ததும் நாமக்கல் கலெக்டர், காவல்துறைக்கு புகாரளித்த நிலையில் குழந்தை விற்பனை முயற்சி தடுக்கப்பட்டதாகவும் அரசு மருத்துவர் அனுராதா மற்றும் புரோக்கர் லோகாம்பாள் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.