கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு!

Filed under: அரசியல்,இந்தியா |

டில்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 21ம் தேதி டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 20ம் தேதி ஜாமீன் வழங்கியது. அமலாக்கத்துறை அதனை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது. இவ்வழக்கினை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், கெஜ்ரிவாலின் ஜாமீனை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது. டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து கடந்த 21ம் தேதி வெளியேறுவதாக இருந்தது. ஆனால் தற்போது திடீரென்று இந்த உத்தரவு வந்தது.