கே.பி.முனுசாமியின் குற்றச்சாட்டு!

Filed under: அரசியல்,தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரஜினியை வைத்து திமுக சீனியர்களை அவமதிக்கிறார் என்று கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம், “புத்தகம் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், முதலமைச்சரை புகழ்ந்து பேசி உள்ளதோடு திமுகவில் உள்ள சீனியர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையின் ஆட்சியில் பல்வேறு பதவிகள் வகித்து அதன் பிறகு தான் முதலமைச்சராக உள்ளார். ஆனால் எம்ஜிஆர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அடிப்படை உறுப்பினராக இருந்து படிப்படியாக உயர்ந்து பொதுச்செயலாளர் ஆகியுள்ளவர் எடப்பாடி பழனிச்சாமி. இதெல்லாம் ரஜினிக்கு தெரியாது. முதலமைச்சரை புகழ வேண்டும் என்பதற்காக ரஜினிகாந்த் தான்தோன்றித்தனமாக பேசியுள்ளார். திமுகவில் உள்ள சீனியர்களை வெளியேற்ற முடியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த்தை அழைத்துப் பேசவிட்டு சீனியர்களை அவமானப்படுத்தி இருப்பதாக எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது. திமுகவுக்காக நீண்ட காலம் உழைத்த துரைமுருகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வெளியேற வேண்டும் என்று ரஜினியை வைத்து முதலமைச்சர் அவமானப்படுத்தி உள்ளார். இதுபோன்று இரண்டாம் கட்ட தலைவர்களை அதிமுக ஒருபோதும் அவமதித்தது இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.