கைலாசா நாடு குறித்து நாளை அறிவிக்கிறார் நித்தியானந்தா!

Filed under: தமிழகம் |

நித்தியானந்தா நாளை கைலாசா நாடு எங்குள்ளது என்று அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாலியல் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான நித்தியானந்தா மீது வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. வழக்கு தொடர்பாக காவல் துறையினர் நித்தியானந்தாவை தேடி வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு அவர் வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. தமிழக காவல் துறை தொடங்கி தேசிய புலனாய்வு அமைப்பு வரை தேடியும் நித்தியானந்தாவை கண்டுபிடிக்க முடியவில்லை. கைலாசா எனும் தனித்தீவை உருவாக்கி அங்கு உள்ளதாக நித்தியானந்தா கூறியிருந்தார். இந்நிலையில் கைலாசா எங்கு இருக்கிறது என்ற தகவலை குரு பூர்ணிமா தினமான நாளை அறிவிப்பேன் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றில் அவர், “எங்கள் நாட்டில் பணத்திற்கு மதிப்பு கிடையாது. உணவு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படும். கைலாசாவில் நீங்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் தங்கலாம். செலவு கிடையாது, மக்களுக்கு எந்தவிதமான வரியும் கிடையாது, காவல்துறை, ராணுவம் இல்லாத அகிம்சை தேசசமாக கைலாசா இருக்கும்” நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.