“கொட்டுக்காளி” படத்தின் ஷுட்டிங் அப்டேட்!

Filed under: சினிமா |

நடிகர் சிவகார்த்திகேயன் நான்கு திரைப்படங்கள் தயாரித்து உள்ளார். தற்போது ஐந்தாவது படமாக சூரி நடிக்கும் “கொட்டுக்காளி” திரைப்படத்தை தயாரித்து வருகிறார். படத்தை “கூழாங்கல்” படத்தின் இயக்குனர் வினோத் ராஜ் இயக்குகிறார்.

சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான எஸ்.கே. புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் சூரி நாயகனாக நடிக்கவுள்ளார். மலையாள நடிகை அன்னாபென் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து விரைவில் ரிலீஸ் செய்யப்படும் தேதி குறித்து அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.