நடிகர் விஜய் சமீபத்தில் அவரது அரசியல் வருகையை அறிவித்தார். தற்போது அவர் கோட் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக ரஷ்யாவுக்கு சென்று வந்தது படக்குழு. படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியது. அதே போல தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியதாக சொல்லப்பட்டது. ஆனால் பின்னர் அந்த முடிவில் இருந்து சன் தொலைக்காட்சி நிறுவனம் பின் வாங்கியது. தயாரிப்பாளருக்கும் சன் தொலைக்காட்சிக்கும் பேரம் படியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இப்போது ஜி தொலைக்காட்சி “கோட்” படத்தை வாங்கியுள்ளது. கோட் திரைப்படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக தற்போது படக்குழு துபாய் கிளம்பி சென்றுள்ளது. “கோட்” படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். இதுவரை படத்தின் டப்பிங் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.