சசிகலா உறவினர் பாஸ்கரன் திடீர் கைது!

Filed under: அரசியல்,தமிழகம் |

மத்திய வருவாய் புலனாய்வால் செம்மரக்கடத்தல் வழக்கில் சசிகலாவின் உறவினர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் விடிய விடிய விசாரணை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடிக்கடி தமிழர்கள் ஆந்திர போலீசாரால் செம்மர கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரன் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பாஸ்கரன் இடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றதாகவும் நடத்தி வந்த பர்னிச்சர் கடையில் இருந்து ரூபாய் 45 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டை பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.