சந்தானத்தை சம்மதிக்க வைத்த விக்னேஷ் சிவன்!

Filed under: சினிமா |

நடிகர் சந்தானம் இனிமேல் காமெடியனாக நடிக்க மாட்டேன் என்று உறுதியாக கூறியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சந்தானத்தை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரிரு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்து வருவதால் சந்தானத்தைக் கதாநாயகனாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகியுள்ளது. ஆனால் பிடிவாதமாக கதாநாயகனாகதான் நடிப்பேன் என சந்தானம் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது அஜீத் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் சந்தானத்தை நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் கதை சொல்லி அவரை நடிக்க வைக்க சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் சந்தானம் காமெடியனாக நடிக்காமல் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.