சபரிமலையில் பாதுகாப்பு போலீசாருக்கு சின்னம்மை!

Filed under: இந்தியா |

கார்த்திகை மாதம் தொடங்கியது முதல் ஐயப்ப பக்தர்கள் நோன்பிருக்க ஆரம்பித்து ஐயப்பன் கோவிலுக்கு போவது வழக்கம்.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பாதுகாப்பு பணிக்காக நியமனம் செய்யப்பட்டிருந்த 5 போலீசாருக்கு சின்னம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள தகவல் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உலகப் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து கொண்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் நீங்கி விட்டபடியால் இந்த ஆண்டு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. இந்நிலையில் சபரிமலை பாதுகாப்பு பணியில் இருந்த 5 போலீசார்களுக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.