சமந்தாவை பாராட்டிய கீர்த்தி சுரேஷ்!

Filed under: சினிமா |

நடிகை சமந்தா நடித்து சமீபத்தில் வெளியாகி உள்ள “சகுந்தலா” திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்லை எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவான புராண திரைப்படத்தில் சமந்தா, சகுந்தலையாக நடித்துள்ளார். படத்தை குணசேகர் இயக்கியிருந்தார். கடந்த ஏப்ரல் 14ம் தேதி ரிலீசான திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சமந்தாவின் நெருங்கிய தோழியும், சக நடிகையுமான கீர்த்தி சுரேஷ் சமந்தாவை “வலிமையான இதயம் கொண்டவர்” என பாராட்டியுள்ளார். ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் சமந்தாவைப் பற்றி சொல்லுங்கள் என்று கேள்வி கேட்ட போது “நான் வியந்து பார்க்கும் ஆளுமைகளில் ஒருவர். நான் கடந்து வந்த நபர்களில் மிகவும் வலிமையானவர். எளிமையாக சொல்வதென்றால், தடுத்து நிறுத்த முடியாதவர்” எனப் புகழ்ந்துள்ளார்.