சர்ச்சைக்கு உள்ளான கேரள நீதிமன்ற தீர்ப்பு!

Filed under: இந்தியா |

கேரள நீதிமன்றம் ஆபாச உடை அணிந்த பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்தால் அது குற்றமாகாது என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இத்தீர்ப்புக்கு பெண்கள் தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

கேரள ஐகோர்ட் நீதிபதி வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியபோது ஆபாச உடை அணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்தால் குற்றமாகாது என்று கூறியுள்ளார். இத்தீர்ப்புக்கு பெண்கள் மற்றும் மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் இத்தீர்ப்புக்கு கடும் விமர்சனங்களை பெண்களின் அமைப்பு செய்து வருகிறது. ஆண்களை பாலியல் கொடுமைகளை நிறுத்த இந்த சமூகம் கற்றுக்கொடுக்கவில்லை என்றும், பெண்கள் தலை முதல் கால் வரை தங்களை மறைத்துக் கொள்ளுமாறு மட்டுமே கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும், ஆண்களுக்கு பெண்களின் சம்மதத்தை மதிக்க கற்று கொடுப்படுவதில்லை என்றும், பெண்கள் அமைப்புகள் கூறி வருகின்றன. இத்தீர்ப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.