சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Filed under: தமிழகம் |

இரண்டு பேர் ஓட்டலில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட சில நிமிடங்களில் அவர்கள் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஓட்டலில் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்ற சாப்பிட்ட இரண்டு நபர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் திடீரென உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவரின் பரிசோதனையில் அவர்கள் சாப்பிட்ட சிக்கன் ரைஸ் தான் அவர்களது உடல் நலத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது. இது குறித்து தகவலறிந்தவுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா உடனடியாக ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்றார். அவருடன் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சென்று ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டதோடு, ஹோட்டல் உரிமையாளரிடம் விசாரணை செய்யப்பட்டது. தற்போது சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.