சினிமாவில் பாரபட்சம் பற்றி நடிகையின் பேட்டி

Filed under: சினிமா |

நடிகை அவிகா கவுர், “சினிமாவில் பாரபட்சமாக நடந்துக் கொள்கிறார்கள். தென்னிந்திய ரசிகர்கள் இதைப் பார்ப்பதில்லை” என்று கூறியுள்ளார்,

தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் பிரபலமான நடிகை அவிகா கவுர். இவர், தெலுங்கு சினிமாவில் “உய்யல ஜம்பாலா” படம் மூலம் அறிமுகமானவர். இவர் தெலுங்கில் நடித்த படங்கள் பெரியளவில் போகவில்லை. எனவே மும்பைக்கு குடிபெயர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்தினார். தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் வாரிசுகள் ஆதிக்கம் உள்ளதாக சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில், “பாலிவுட் சினிமாவை விட தென்னிந்திய சினிமாவில்தான் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. தென்னிந்திய சினிமாவில் பாரபட்சம் காட்டப்படுகிறது. தென்னிந்திய சினிமாக்களை இந்தி ரசிகர்கள் பார்த்து ரசிக்கிறார்கள், ஆனால், இந்தி படங்களை தென்னிந்திய ரசிகர்கள் பார்ப்பதில்லை” என்று தெரிவித்துள்ளார்.