சின்னம் கிடைத்ததால் பாமகவினர் மகிழ்ச்சி!

Filed under: அரசியல்,தமிழகம் |

பாமக மாம்பழம் சின்னத்தை கேட்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்தது. அக்கட்சிக்கு மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அங்கீகாரம் பெறாத கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தாங்கள் போட்டியிடும் சின்னத்தை விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கி வருகிறது. பாமக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற தரத்தை இழந்தது. மீண்டும் மாம்பழம் சின்னத்தை விண்ணப்பித்திருந்த நிலையில் அது குறித்த பரிசீலனை கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக பாஜக கூட்டணியில் பாமக இணைவது உறுதி செய்யப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் அக்கட்சிக்கு மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. இது தற்செயலாக நடந்ததா? அல்லது பாஜக கூட்டணியில் பாமக இணைந்ததால் நடந்ததா? என்பது குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விவாதம் செய்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி உள்பட சில கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் கிடைக்காத நிலையில் பாமகவுக்கு மட்டும் அவர்கள் கேட்ட சின்னம் கிடைத்துவிட்டது.