சின்மயி பணமோசடி குறித்து எச்சரிக்கை எதிவு!

Filed under: சினிமா |

சின்மயி “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அத்திரைப்படத்தில் அவர் பாடிய ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் தேசிய விருது வரை சென்றது. அதன் பிறகு பல மொழிகளில் பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய அவர் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார்.

அவர் தன்னுடைய சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள ஒரு எச்சரிக்கை பதிவு வைரலாகி வருகிறது. அதில் “என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ஜிழிணிஙி போலி மெஸேஜ் மூலமாக மொத்த பணமும் எடுக்கப்பட்டுள்ளது. ஓடிபி எண் கூட பகிராமல் எப்படி இவர்கள் இந்த நூதன மோசடியை செய்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.