சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது; தமிழிசை!

Filed under: அரசியல்,புதுச்சேரி |

புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறுமி கொலை வழக்கிலிருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வலியுறுத்தியும் புதுச்சேரி முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “சிறுமியின் கொலை குறித்து அறிந்ததும் நிலைகுலைந்து விட்டதாகவும், மிகுந்த மன வேதனை தருகிறது. சிறுமி கொலை வழக்கில் மிக தீவிரமான நடவடிக்கை எடுப்பேன். கொலை வழக்கிலிருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் மனித உரிமை எல்லாம் நான் பார்க்க மாட்டேன். புதுச்சேரியில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளேன்” என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.