சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ் வாதம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சியில் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு இருப்பதாக வாதம் செய்துள்ளார்.

இன்று மூன்றாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு நடைபெற்று வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இன்று வாதம் செய்தது. இதில், “அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு எனக்கு தான் உள்ளது. அதிமுகவில் இப்போது தேர்தல் நடந்தால் கூட நான் தான் வெற்றி பெறுவேன். ஒற்றை தலைமையில் அமர்வேன், தனி மனிதனின் சுயநலத்திற்காகவும் பதவிக்காகவும் கட்சியை பலி கொடுக்கிறார்கள்,” என ஓபிஎஸ் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் வாதம் செய்துள்ளார். இந்த வாதத்திற்கு பின் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.