சூப்பர் ஸ்டாரின் கேள்விக்கு பிரபாஸின் பதில்

Filed under: இந்தியா,சினிமா |

நடிகர் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடிப்பது பெருமை என்று தெரிவித்துள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் உருவான “பாகுபலி” யின் 2 பாகத்தின் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் பிரபாஸ். இதன் மூலம் பிரபாஸ் இந்தியா முழுதும் பிரபலமானார்.

“பாகுபலி” திரைப்படத்திற்குப் பின் அவர் நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களும் பான் இந்தியா படங்களாக உருவாகி வருகின்றன. “பாகுபலி” படத்திற்குப் பின் வெளியான “சாஹோ,” “ராதே ஷியாம்“ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது “ஆதிபுரூஸ்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடித்துள்ளார். சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடித்துள்ளார். இப்படம் ரூ.600 பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. விரைவில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்படம் பற்றி பிரபாஸ் கூறியதாவது: “ஆதிபுரூஸ் படத்தை சினிமா என்று கூறக்கூடாது. இது ராமாயணம் இப்படத்தில் நடித்தது என் அதிர்ஷ்டம். ராமர் அனைத்து மக்களின் இதயத்திலும் இருக்கிறார். அப்படிப்பட்ட மகானாக நடிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்ததை இறைவனின் அருளாக நினைக்கிறேன். இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியான போது நடிகர் சிரஞ்சீவி என்னிடம், நீ ராமராக நடிக்கிறாயா என்று கேட்டார். அதற்கு நான் ஆமாம் என்று கூறினேன். அது உண்மையில் அதிர்ஷ்டம் அனைவருக்கும் கிடைக்காது. உனக்குக் கிடைத்திருக்கிறது. என்று சொல்லி பாராட்டினார்’’ என்று கூறினார். “ஆதிபுரூஸ்” திரைப்படம் வரும் 16ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளது. இத்திரைப்படத்தின் டீசரில் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று ஒரு டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.