சூர்யாவின் டுவிட்!

Filed under: சினிமா |

“விக்ரம்” திரைப்படத்தில் நடித்தது பற்றி நடிகர் சூர்யா டுவிட்டரில் தனது பதிவை வெளியிட்டள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்த “விக்ரம்“ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஹாட் ஆப் த டாப்பிக்காக மாறியுள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமலஹாசன் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரிலீசாகும் முதல் படம் “விக்ரம்”. இத்திரைப்படம் கமல்ஹாசனின் திரைவாழ்வில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக பேன் இந்தியா திரைப்படமாக ரிலீசாகி உள்ளது. இப்படத்தில் சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘சூர்யா இடம்பெற்றிருக்கும் விக்ரம் படத்தின் போஸ்டர்’ ஒன்றைப் பகிர்ந்தது இணையத்தில் வைரலானது.

திரைப்படம் ரிலீசாகி சூர்யாவின் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதைக் பெரிதாக கவர்ந்துள்ளது. படத்தின் இறுதியில் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.இத்திரைப்படத்தில் நடித்தது குறித்து சூர்யா டுவிட்டரில் “பிரியமுள்ள கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது!?.. உங்களுடன் திரையில் தோன்றவேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது. இது நடப்பதற்குக் காரணமாக இருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.