சூர்யா குணமடைய ரசிகர்கள் சிறப்பு வழிபாடு!

Filed under: சினிமா |

இன்று சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் நடிகர் சூர்யா விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

நடிகர் சூர்யா தற்போது ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேசன்ஸ் தயாரிப்பில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. சென்னையில் இப்பட சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், இதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் சூர்யாவின் “தோளில் கயிறு” படத்தில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிகிச்சை பெற்று வரும் சூர்யா நேற்று முன்தினம் ‘‘உங்கள் அனைவரின் அன்புக்கு எப்போது நன்றியுடன் இருக்கிறேன். விரைவில் குணமடையுங்கள் என்ற உங்களின் மெசேஜ்களுக்கு நன்றி, நான் நன்றாக உணர்கிறேன்’’ என்று தெரிவித்திருந்தார். சூர்யா விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் இன்று சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.