சூர்யா பட அப்டேட்!

Filed under: சினிமா |

நடிகர் சூர்யாவின் திரைப்படம் தீபாவளி முடிந்து அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் நிலையில் படத்தில் முக்கிய கேரக்டரில் கே.எஸ்.ரவிக்குமார் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனேகமாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நாயகியின் தந்தையாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்தகட்ட ஷூட்டிங் தீபாவளி முடிந்து அக்டோபர் 26ம் தேதி முதல் மீண்டும் கோவாவில் தொடங்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.