செந்தில் பாலாஜிக்கு 15வது முறை காவல் நீட்டிப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

15வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் சட்டவிரோதமான பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த ஆறு மாதங்களாக சிறையில் உள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து காணொளி மூலம் அவர் ஆஜர் படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை ஜனவரி 22ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து 15வது முறையாக அவரது காவல் நீடிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளது.