செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை!

Filed under: அரசியல்,தமிழகம் |

அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் சோதனை செய்தபோது அவருடைய வீடு பூட்டி இருந்ததையடுத்து பூட்டை உடைத்து சோதனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திமுக பிரமுகர் சாமிநாதன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தது. இன்று மீண்டும் கரூரில் சில இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யும் இடங்களில் ஒன்று செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு. அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்றபோது செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீட்டில் இல்லாததால் அவரது வீடு பூட்டி இருந்தது. இதையடுத்து பூட்டை உடைத்து அமலாக்கத்துடைய அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.