சென்செக்ஸ் 4300 புள்ளிகள் சரிவு!

Filed under: இந்தியா,உலகம்,தமிழகம் |

இன்று காலை முதல் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. பாஜக தனித்து ஆட்சியமைக்க வழி இல்லை என்பதால் பங்குச்சந்தை படுமோசமாக சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்

பாஜக கூட்டணி 295 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 233 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே தனித்து ஆட்சி அமைக்க வழி இல்லை என்றும் கூட்டணி ஆட்சிக்கு மட்டுமே சாத்தியம் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து பங்குச்சந்தை இன்று காலை முதல் மிக மோசமாக சரிந்து உள்ளது. வரலாறு காணாத வகையில் சென்செக்ஸ் 4300 பள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்து உள்ளது. நிஃப்டி 1300க்கும் அதிகமான புள்ளிகள் சரிந்து உள்ளது. இச்சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் மிக மோசமான நஷ்டத்தை எதிர்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.