சென்னை அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக்!

Filed under: சினிமா,தமிழகம் |

சமீபத்தில் டில்லியில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் இன்று சென்னை அழைத்து வரப்பட்டதாகவும் அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் டில்லியில் மூன்று தமிழர்கள் போதைப் பொருளுடன் கைதானார். இக்கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என தெரிய வந்தது.

இதையடுத்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது. சமீபத்தில் அவர் டில்லியில் கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து போதை பிரிவு தடுப்பு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். தற்போது வந்துள்ள தகவலின் படி போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் டில்லியிலிருந்து சென்னை அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் சென்னையில் உள்ள அயப்பாக்கத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவரிடம் தீவிர விசாரணை செய்து வரும் நிலையில் இந்த விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.