சென்னை – கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ரயில்; மக்கள் கோரிக்கை!

Filed under: தமிழகம் |

தற்போது தமிழகத்தில் 2 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகிறது. சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னையிலிருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரயில் குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை அந்த ரயிலை நீடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையிலிருந்து திருச்சி மற்றும் மதுரைக்கு அதிக ரயில்களை இயக்கப்படுகிறது. ஆனால் நெல்லையிலிருந்து கன்னியாகுமாரி பகுதிகளுக்கு ஒரு சில ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே சென்னையிலிருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற நகரங்களுக்கு செல்பவர்கள் வசதிக்காக சென்னையிலிருந்து கன்னியாகுமாரி இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து மதுரை இடையே இயக்க இருக்கும் வந்தே பாரத் ரயில் கன்னியாகுமாரி வரை நீடிக்கப்படுமா? என்று பொதுமக்கள் இடையே கேள்வி எழுந்துள்ளது.