சொத்துக்காக நடிகை கொலை; வளர்ப்பு தந்தை கைது!

Filed under: தமிழகம் |

பாலிவுட் நடிகையை வளர்ப்புத் தந்தையே சொத்துக்காக கொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு பாலிவுட் நடிகை லைலா கான் திடீரென காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். லைலா கானின் தாயார் பர்வேஸை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் என்றும் அவர்தான் லைலா காணாமல் போனதற்கு காரணம் என்றும் கண்டுபிடித்தனர். இதை அடுத்து பர்வேஸிடம் போலீசார் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. அதன்படி அவர்தான் லைலா கான் உள்ளிட்ட ஆறு பேரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தற்போது இவ்வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது அத்தீர்ப்பில் லைலாகான் வளர்ப்பு தந்தை பர்வேஸ் தான் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அவரது தண்டனை குறித்த விவரம் வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய குற்றத்திற்கு அவருக்கு மரண தண்டனை கிடைக்கும் என்-று எதிர்பார்க்கப்படுகிறது