சொந்த ஊருக்கே குண்டு வீசிய ரஷ்யா!

Filed under: உலகம் |

கடந்த ஓராண்டாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் தற்போது தவறுதலாக தன் சொந்த நாட்டிலேயே குண்டு வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் எல்லையிலுள்ள நகரில் ரஷ்யா குண்டு வீசுவதற்கு பதிலாக ரஷ்யா எல்லையில் உள்ள நகரில் குண்டு வீசியது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ரஷ்ய அதிகாரி ஒருவர் கூறிய போது ரஷ்யா வீசிய குண்டால் நகரத்தின் மையப்பகுதியில் பெரும் பள்ளம் உருவாகியுள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பில் இரண்டு பெண்கள் காயம் அடைந்துள்ளனர், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என்று தெரிவித்தார். உக்ரைன் நகரின் மீது குண்டு வீசுவதற்கு பதிலாக ரஷ்ய நகரின் மீது தவறுதலாக கொண்டு வீசியதை அடுத்து விசாரணை நடத்தி வருவதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.