சோனியா காந்தி &- உத்தவ் தாக்கரே சந்திப்பு?

Filed under: அரசியல்,இந்தியா |

சோனியா காந்தியை டில்லிக்கு சென்று உத்தவ் தாக்கரே சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநில தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையடுத்து சோனியா காந்தி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

டில்லிக்கு மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சென்றுள்ளார். அங்கு அவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சுனிதா கெஜ்ரிவால் உள்ளிட்டவரை சந்தித்தார். அடுத்ததாக சோனியா காந்தி உடன் சந்திப்பு நடத்தி உள்ளதாகவும் இச்சந்திப்பின்போது காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டணி, முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் தரப்பில் இருந்து முதல்வர் வேட்பாளராக உத்தவ் தாக்கரே அறிவிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சியின் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் விரிவான ஆய்வுக்கு பின் தொகுதி பங்கீடுகள் குறித்து இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இக்கூட்டணியில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இணைய உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட உத்தவ் தாக்கரே சிவசேனா முடிவு செய்திருப்பதாகவும் முதலமைச்சர் பதவி தனக்கு தான் என்பதை உறுதி செய்வதற்காக தான் அவர் டில்லிக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.